follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடு"வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக உள்ளோம்"

“வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக உள்ளோம்”

Published on

பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.

அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர், இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் தேவையான விளம்பரங்களை அச்சிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஊடக அதிகாரி, தற்போது வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் அரச அச்சகத்திற்கு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துப் பட்டியல்களும் கிடைத்தவுடன் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் தொடர்பான அச்சுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் செலுத்தும் அளவுக்கு அச்சகத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுராதபுரம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை...

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள்

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க...