follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP3இன்று முதல் கறுப்பு மாதம் பிரகடனம்

இன்று முதல் கறுப்பு மாதம் பிரகடனம்

Published on

இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கருப்பு ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்ட மாதம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் சமந்த கோரளேஆரச்சி கருத்து தெரிவித்தார்.

அதற்கமைய, அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக மதிய போசன நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற வரி விதிப்பு காரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஐம்பதுக்கும் அதிகமான மின் பொறியியலாளர்கள் தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மின் பொறியலாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...