follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுபாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

Published on

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

பேக்கரித் தொழிலுக்குத் தேவையான மா, முட்டை மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைரஸ் தொற்று – பன்றி இறைச்சி உண்ண வேண்டாம்

தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை...

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு? நிதி அமைச்சு விளக்கம்

ஐந்து வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான...

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...