குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அத்தியாவசிய தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தங்களுக்கு அண்மையிலுள்ள அலுவலகத்துக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய வழியைப் பயன்படுத்தி திகதியொன்றை முன்பதிவு செய்து வருகைதர வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.
அத்தகைய முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திணைக்களம் அறிவித்துள்ளது..
https://eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தள முகவரியினூடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.