follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10% குறைக்க பரிசீலனை

பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10% குறைக்க பரிசீலனை

Published on

பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடனை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்தார்.

இந்த குழு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அமைச்சகங்களின் செலவினங்களை 15 சதவீதம் குறைப்பது, மத்திய உறுப்பினர்கள் , மாகாண உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 30 ஆக குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேசிய சிக்கனக் குழு விரைவில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்ஸ்டாவில் 17 மில்லியன் Followers பெற்ற முதல் ஐ.பி.எல் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி...

பாகிஸ்தான் ரயில் கடத்தல் – பணயக்கைதிகள் அனைவரும் மீட்பு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர்...

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி...