பலத்த காற்று, மழை ஆகியவற்றினால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
அத்துடன், மின் தடை ஏற்படக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட ஏராளமான இடங்களின் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் தடைஏற்பட்டுள்ள பிரதேசங்களில் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தது.
மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கையின் தென்பகுதியில் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மலையக பிரதேசத்தில் காற்றினால் மின்விநியோகத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட பிரதேசங்களில் மின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
——————————-[UPDATE]
நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கண்டி, காலி, களுத்துறை, தெஹிவளை, ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.