follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுநாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

Published on

பலத்த காற்று, மழை ஆகியவற்றினால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

அத்துடன், மின் தடை ஏற்படக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட ஏராளமான இடங்களின் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் தடைஏற்பட்டுள்ள பிரதேசங்களில் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தது.

மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கையின் தென்பகுதியில் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், மலையக பிரதேசத்தில் காற்றினால் மின்விநியோகத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட பிரதேசங்களில் மின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

——————————-[UPDATE]

நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கண்டி, காலி, களுத்துறை, தெஹிவளை, ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...