follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉள்நாடுசட்டவிரோதமாக நபர்களை சிறையில் அடைக்க இது சர்வாதிகார நாடல்ல

சட்டவிரோதமாக நபர்களை சிறையில் அடைக்க இது சர்வாதிகார நாடல்ல

Published on

நாட்டின் வரிச்சுமை அதிகரித்து, மின் கட்டணமும் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் இந்நாட்டின் துன்பப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு இந்நாட்டின் நீதித்துறை ஊடாக நீதி கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித ஆகியோரை பார்வையிடும் முகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(25) வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், எரிசக்தி துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், தற்போதைய அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும் அவர்கள் முன்நின்று குரல் எழுப்பினர் எனவும், அவர்கள் எந்த வன்முறை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

,அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமையை அவர்கள் பயன்படுத்தியதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களை சட்டவிரோதமாக சிறையில் அடைக்க நம் நாடு ஒரு சர்வாதிகார அல்லது ஏதோச்சதிகார நாடல்ல எனவும், இது ஓர் ஜனநாயக நாடு எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இவ்விருவரினது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க, ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் எனவும், அவர்களின் விடுதலைக்காக சாத்தியமான அனைத்து அமைதியான, ஜனநாயக மற்றும் சட்ட ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தான் முன்நிலை வகிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நாட்டில் 550 அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுகின்றன” – ஞானசார தேரர்

இந்த நாட்டில் ஐந்நூற்று ஐம்பது அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுவதாகவும் இதனைக் கூறுவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுபல சேனா...

கம்மன்பிலவிடமிருந்து மீண்டும் சவால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (20)...