follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஆட்சேபனை தாக்கலுக்கு சஜித் - மத்தும பண்டார ஆகியோருக்கு திகதி அறிவிப்பு

ஆட்சேபனை தாக்கலுக்கு சஜித் – மத்தும பண்டார ஆகியோருக்கு திகதி அறிவிப்பு

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பதவி வகிப்பது சட்டவிரோதமானது என கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு இன்று (25) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த மனு தொடர்பில் தமது ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் திகதிகளை வழங்கியது.

இந்த மனு கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கியது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அரசியலமைப்பின்படி, வேறு கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியாது என மனுதாரர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவர்களது கட்சி அங்கத்துவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அடிப்படைகள் இல்லை என தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றில் கோரியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...