ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குழு கடந்த வாரத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளதால், பல உதவி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும், உதவியின்றி இறந்தாலும் கூட, தங்கள் அமைப்பு எடுத்த முடிவை மாற்றப் போவதில்லை என தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.