நுவரெலியா – தலவாக்கலை வீதியின் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியை இன்று(21) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாற்றுப் பாதையாக டெஸ்போர்ட் வழியாகச் செல்லும் வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.