தேர்தல் நிதிச் சட்டத்தை இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்க முயன்றமையானது, இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து தேர்தலை உரிய வகையில் நடாத்துவதற்கு என ஐக்கிய மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் செலவுகளை மட்டுப்படுத்துவதற்கு தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, சட்டமூலத்திற்கான அடிப்படை விதிமுறைகளை மாத்திரம் நிறைவேற்றி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை எனவும் தெரிவித்தார்.