follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுரிஷாத்தின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச்சில்

ரிஷாத்தின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச்சில்

Published on

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து பாதுகாப்பு வனப்பகுதியில் காடுகளை அழித்தமை தொடர்பான மனு தொடர்பில் தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறுகோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று வியாழக்கிழமை (19) மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கல்லாறு மற்றும் மறிச்சிக்கட்டு பிரதேசங்களில் காடுகள் வெட்டப்பட்டதால் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் நீதி மையம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தது.

2020 ஆம் ஆண்டு, இந்த ரிட் மனுவின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வன அழிவு இடம்பெற்ற பகுதிகளில் தனது தனிப்பட்ட செலவில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாத் பதியுதீனுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின்...