follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுகபொத உயர்தரப் பரீட்சைக்கு 4 சிறப்பு மையங்கள்

கபொத உயர்தரப் பரீட்சைக்கு 4 சிறப்பு மையங்கள்

Published on

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (2022) நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (18) தெரிவித்தார்.

கைதிகளுக்கு கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய பரீட்சை பெற விரும்புவோருக்காக இரத்மலானை மற்றும் தங்காலையிலும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கும் பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

இம்முறை பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனியார் பரீட்சார்த்திகளுடன் 331,709 பரீட்சார்த்திகளும் பங்குபற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு, 23ம் கிகதி முதல், பெப்ரவரி 17ம் திகதி வரை, 22 நாட்களுக்கு இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...