ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் திகதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்மானத்தில் திருப்தி இல்லை எனவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விபத்தை தடுக்காதவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ள போதும் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.