follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்பு

பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்பு

Published on

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டதின் இறுதி அமர்வில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 30 ஆம் திகதி பங்கேற்றார். இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸாநாயக்க அவர்களும் உடனிருந்தார்.

மெய்நிகர் முறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி ஆரம்பமானது. செயற்குழுவில் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுநலவாயத்தின் 9 பிராந்தியங்களான ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, பிரித்தானிய தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல், கனடா, கரீபியன், அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக், இந்தியா, பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களின் பிரதிநிதிகள் அடங்குவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...