follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுதேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு

தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு

Published on

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 – 120 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 85 – 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது தேங்காய் அறுவடைக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் இது பெப்ரவரி இறுதி வரை நீடிக்கலாம் என தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வருடம் 3300 மில்லியன் தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...