follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுநாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் கடன் சுமைக்கு சமம்

நாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் கடன் சுமைக்கு சமம்

Published on

கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டின் 7% இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாட்டை விட்டு வெளியேறிய செல்வம் நாட்டின் மொத்த கடன் சுமைக்கு சமமாக இருப்பதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அதற்கு அப்பால் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஏற்றுமதியை பன்முகப்படுத்துவதை துரிதப்படுத்தும் வகையில் தகவல் தொழிநுட்பத் துறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

“சர்வதேச வர்த்தகத்தின் மதிப்பை முதன்முதலில் புரிந்துகொண்டவர் நமது பெரிய மன்னர் பராக்கிரமபாகு. அவர் பொதுவாக விவசாயத்திற்கு அப்பால் சென்று சர்வதேச வர்த்தகத்தின் மூலம் நாட்டை ஆசியாவிற்கும் உலகிற்கும் திறந்தார்.

1976 க்குப் பிறகு இப்போது வரை பொருட்களின் உற்பத்திக்கு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை பின்பற்றி வருகிறோம். இது எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது? 1990க்குப் பிறகு இந்த நாட்டின் ஏற்றுமதித் துறையைப் பார்த்தால், எதுவும் மாறவில்லை. நாங்கள் இன்னும் ஆடைத் தொழில், தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் ஆகியவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளோம்..” என பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...