follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅதீத சொத்துக் குவிப்பு : விமலுக்கு எதிரான தீர்ப்பு பெப்ரவரி 28

அதீத சொத்துக் குவிப்பு : விமலுக்கு எதிரான தீர்ப்பு பெப்ரவரி 28

Published on

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியுமா இல்லையா என பெப்ரவரி 28ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“பாராளுமன்ற உறுப்பினர்” என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அரச ஊழியர் என வரையறுக்கப்படாததால், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர முடியாது என விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

முதற்கட்ட ஆட்சேபனை தொடர்பான எழுத்துமூல உரைகள் இருதரப்பு சட்டத்தரணிகளினால் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதன் பிறகு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதா? இல்லை? பெப்ரவரி 28ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலத்தில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறி விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இலஞ்ச சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாயும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...