follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுமாவனல்லை இரட்டை கொலையில் இரு சந்தேகநபர்கள் கைது

மாவனல்லை இரட்டை கொலையில் இரு சந்தேகநபர்கள் கைது

Published on

மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிஓயா பிரதேசத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இரு இளைஞர்களை கொன்று புதைத்த சம்பவத்தில் மாவனல்லை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வியாபாரி என கருதப்படும் நபர் ஒருவரையும் அவரது மூன்று கையாளர்களையும் கைது செய்ய கேகாலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் கையாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணைப்புச் செய்தி 
ஐஸ் தகராறில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...