follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2கட்டுப்பணம் செலுத்திய 11 கட்சிகள்

கட்டுப்பணம் செலுத்திய 11 கட்சிகள்

Published on

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுவரெலியா, கண்டி, பொலன்னறுவை, அம்பாறை, வவுனியா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி நேற்று செலுத்தியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஜனநாயக ஐக்கிய முன்னணி நேற்றைய தினம் செலுத்தியிருந்தது.

இது தவிர நேற்று 11 சுயேச்சைக் குழுக்களும் இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...