உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெறவேண்டாம் என தான் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தினால் ஏதேனும் அசௌகரிகம் ஏற்பட்டிருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய கடிதம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னேவை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.