follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

Published on

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் மேற்கொள்ள எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.

இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே...