வேட்புமனுக்களை ஏற்கும் இறுதி நாளன்று வாக்கெடுப்பு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 235,000 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக தகுதி பெற்றுள்ளனர்.
அதற்கமைய இந்தமுறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒரு கோடி 68 இலட்சத்துக்கு அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.