follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுமரவள்ளி, பலா விலைகளும் அதிகரித்தது

மரவள்ளி, பலா விலைகளும் அதிகரித்தது

Published on

மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இக்காலத்தில் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவிற்கும், ஒரு கிலோ பலாப்பழம் 200 ரூபாவிற்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கு ஏற்ற வகையில் இல்லாததால் மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். .

இதேவேளை, மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பலாப்பழம் போன்றவற்றின் விலைகள் இந்தளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு பிரதான மார்க்கம் மஹவெவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...