தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.
‘கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை தென் கொரியா நீக்குவதற்கு அமைய இந்நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும் தென் கொரியாவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வணிகம், சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து அல்லது பொதுத் தனிப்பட்ட விவகாரங்களுக்காக சீனாவுக்குச் செல்லும் தென் கொரியக் குடிமக்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை நிறுத்தி வைத்து செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
இதேவேளை, ஜப்பானுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கையை சீனா அமுல்படுத்தியுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.