follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை, யானை மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (10) நடத்தும் கலந்துரையாடலில் தீர்மானிக்கும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இதன்படி, சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், பொஹொட்டுவ சின்னத்தில் சில மன்றங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும், சில நிறுவனங்களுக்கு இரு கட்சிகளும் பொதுச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) கொழும்பில் இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...