follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP2ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை, யானை மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (10) நடத்தும் கலந்துரையாடலில் தீர்மானிக்கும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இதன்படி, சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், பொஹொட்டுவ சின்னத்தில் சில மன்றங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும், சில நிறுவனங்களுக்கு இரு கட்சிகளும் பொதுச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) கொழும்பில் இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...