follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

Published on

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுக்கொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சாரும் என கூறப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமைபோன்று கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அரச ஊழியர்கள் இணைய வழியின் ஊடாக தமது கடமைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடமைகளுக்கு அழைக்கப்படும் நபர்கள், கடமைக்கு சமூகமளிக்காத நாட்களில் இணைய வழியாக தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும், அவ்வாறான ஊழியர்கள் அத்தியாவசிய கடமைகளுக்காக மாத்திரம் அழைக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...