முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
அதன்படி, முட்டை இறக்குமதிக்கான சர்வதேச டெண்டர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
இந்த நடவடிக்கைகள் அரச வணிக பல்வேறு சட்டப்பூர்வ கழகம் மூலம் செய்யப்பட உள்ளன. உள்ளூர் சந்தையில் முட்டை விலை வேகமாக அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சந்தைக்குத் தேவையான முட்டைகளின் அளவை அரசு முடிவு செய்து, அரச வணிக பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனத்துக்குத் தெரிவிக்கும் எனவும் கூறப்படுகின்றது.