அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆறு வயது மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
வகுப்பறையில் ஆசிரியருக்கும் முதலாம் ஆண்டு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய ஆசிரியையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறு வயது மாணவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.