follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம்

உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம்

Published on

‘ஓர்த்தடாக்ஸ்’ (‘Orthodox’)கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.

பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், ரஷ்யா முழு போர் நிறுத்தத்தை தொடங்குவது இதுவே முதல் முறை.

கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்யாவின் ‘ஓர்த்தடாக்ஸ்’ (‘Orthodox’)மதத் தலைவரான 76 வயதான பிரத்யாஷ் கிரைலின் கோரிக்கையை மதிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் போர் நிறுத்தத்திற்கு தனது விருப்பத்தை தெரிவித்தார்.

‘Orthodox’ கிறிஸ்துமஸ் விழாவில் இரண்டு நாள் முழு போர்நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி புடின் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து இரண்டு நாட்களுக்கு மட்டும் யுத்த நிறுத்தத்தை மட்டுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

‘Orthodox’ கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்துக்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எடுத்த முடிவு தவறான நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையான போர்நிறுத்தத்தை தொடங்குவதற்கு, ரஷ்ய துருப்புக்கள் அவர்கள் வலுக்கட்டாயமாக கைப்பற்றிய மாகாணங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...