follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஉள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பொது அரசாங்கம் அமைக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பொது அரசாங்கம் அமைக்கப்படும்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலாவெவ பிரதேச சபை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கு மட்டுமன்றி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யாவிட்டால், போராட வேண்டும் அல்லது வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மூன்று மாதங்களில் மத்திய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அதன் பின்னர் அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...