follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடு"தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்" - பாட்டளி

“தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்” – பாட்டளி

Published on

இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபையின் செயற்பாட்டு இலாபத்திற்கு காரணம் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பே தவிர கட்டண அதிகரிப்பு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை முறையே 635.5 மற்றும் 655.0 கிகாவாட் மணிநேர நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் நீர் மின் உற்பத்தி 633.9 ஜிகாவாட் மணிநேரமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த மாதத்தில் கட்டணம் முழுமையாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை மின்சார சபையின் நட்டம் 9 பில்லியன் ரூபா என சபை உறுப்பினர் தெரிவிக்கிறார்..

“அமைச்சரே, இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் உங்கள் கணக்கைச் சரி செய்யுங்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...