ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒக்டோபர் 1 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் வழமை போல மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.