follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2 அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தவில்லை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2 அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தவில்லை

Published on

இரண்டு அரச வங்கிகளில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்ட 7,162.1 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது  என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திறைசேரி உத்தரவாதத்தின் அடிப்படையில் 2016/2017 ஆம் ஆண்டில் குறுகிய கால நிதித் தேவைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகளைப் பெற்றுள்ளது.

மேலும், 2017/2018 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முந்தைய கடன் தொகையை செலுத்தாமல் 2,944 கோடி ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020/2021 ஆம் ஆண்டில் இதே 02 அரச வங்கிகளிடம் மூன்றாவது தடவையாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, மார்ச் 31, 2021க்குள், இரண்டு அரச வங்கிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7,162.1 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.

தேசிய திறைசேரியின் உத்தரவாதத்தின் பேரில் இரண்டு அரச வங்கிகளில் இருந்து மூன்று தடவைகள் பெறப்பட்ட குறுகிய கால கடன் தொகை இன்னும் தீர்க்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...