follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுசீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்

சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்

Published on

துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்களே இவை என அவர் கூறியுள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் சீனி இறக்குமதியாளர்களுடன் இன்று(29) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக லங்கா சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த சீனி தொகையை சதொசவிற்கு வழங்கும் விலை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் – ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர...

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய...