follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுசீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்

சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க தீர்மானம்

Published on

துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்களே இவை என அவர் கூறியுள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் சீனி இறக்குமதியாளர்களுடன் இன்று(29) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக லங்கா சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த சீனி தொகையை சதொசவிற்கு வழங்கும் விலை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...