follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு"போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகமாகக் காரணம் குடும்ப தேர்தல் முறை"

“போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகமாகக் காரணம் குடும்ப தேர்தல் முறை”

Published on

குடும்பத்தை மையமாகக் கொண்ட தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதால், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பது கடினமான விஷயமாக மாறியுள்ளது என்றார்.

இலங்கையில் 4910 சட்டப்பூர்வ அனுமதி பெற்ற மதுபானசாலைகள் உள்ளதாகவும் அவற்றில் 2000க்கும் அதிகமானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 128 மதுபானக்கடைகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...