நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்தும் உள்ளத நாளில் எமது வாசகர் நெஞ்சங்களுக்கு டெய்லி சிலோன் செய்திதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும். ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த நத்தார் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறானதொரு உன்னத தினத்தில், எவரும் அறிந்திராத பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பனி கலந்த வாடைக்காற்றின் குளிரில் பிறந்த குழந்தையை தேடிச் செல்வது அர்த்தமுள்ள நத்தாருக்கு வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை.
மேலும் இந்த நத்தார் தினத்தில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க ‘டெய்லி சிலோன்’ மனதார பிரார்த்திக்கிறோம்.