follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் காயம்

Published on

தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 11 பேர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்துகஹஹெத்கெம மற்றும் பத்தேகம இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...