follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுசீன எரிபொருள் மானியம் பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு

சீன எரிபொருள் மானியம் பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு

Published on

சீன அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு குறைவான நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீட்டர் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியதாகவும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 6.98 மில்லியன் லீட்டர் வழங்குவதாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எஞ்சிய பகுதி நாட்டின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...