follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுதேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

தேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய சூழல் தற்போது இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்திருந்தார்.

ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமை குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தன பரிசீலித்து, கலந்துரையாடி அதன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பதை தேர்தல்கள் பற்றி பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று கூறும் அவர், அதற்கு விதிவிலக்கான வழிமுறைகள் பின்பற்றப்படலாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

முறையான தேர்தல் முறைமை அமைக்கப்படும் வரை தேர்தலை ஒத்திவைப்பது சட்டவிரோதமானது அல்ல என யூ.ஆர். டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...