follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2"மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது"

“மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது”

Published on

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் 60-70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், இலங்கையின் ஆடைத் தொழிலை உலகளவில் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வை ஆடைத்தொழிலால் தாங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் வியாபாரம் செய்வதற்கு போட்டியான சூழல் இருக்க வேண்டும் எனவும், டொலரின் பெறுமதியை கடைசி மின்சாரத்துடன் எடுத்துக் கொண்டால் இலங்கையில் உற்பத்திச் செலவு அதிகமாகும் எனவும் ஒன்றிணைந்த ஆடைகள் சங்க மன்றத்தின் (JAAF) செயலாளர் நாயகம் யோகன் லாரன்ஸ் தெரிவித்தார்.

மீண்டுமொருமுறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஆடைத் தொழிற்சாலைகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...