follow the truth

follow the truth

April, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'ஐஸ்' போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை..- இன்டர்போல்

‘ஐஸ்’ போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை..- இன்டர்போல்

Published on

ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.

இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘லயன் ஷிப்’ நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளதுடன், 22 நாடுகளுக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் 500 பேர் போன பார்ச்சூன் நிறுவனங்களுக்கு சமமான கிரிமினல் கும்பல்களால் கடத்தப்படுவதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஐஸ் போதைப்பொருட்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், பல புதிய போதைப்பொருள் போக்குவரத்து வழிகள் உருவாகியிருப்பதாகவும் இன்டர்போல் தெரிவிக்கின்றது.

இந்த ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளதுடன், ஐஸ் போதைப்பொருளில் ஈடுபட்ட 24 இலங்கை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானுக்காக நாமல் முதலைக்கண்ணீர் வடிக்க காரணம் இருக்கு – அமைச்சர் நளிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம்...

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

மைத்திரிபால சிறிசேன CID இற்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்...