follow the truth

follow the truth

April, 22, 2025
Homeவிளையாட்டுதாயகம் சென்றடைந்தனர் உலக சம்பியன்கள்

தாயகம் சென்றடைந்தனர் உலக சம்பியன்கள்

Published on

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஆர்ஜென்டீன அணி தாயகம் சென்றடைந்துள்ளது.

கத்தாரில் கடந்த ஞாயிறு இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸை பெனல்டி முறையில் 4:2 கோல்கள் விகிதத்தில், தோற்கடித்து ஆர்ஜென்டீனா சம்பியனாகியது.

இந்நிலையில், மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணியினர் ஆர்ஜென்டீனாவை சென்றடைந்தனர்.

No description available.

தலைநகர் புவனேர்ஸ் அயர்ஸஸிலுள்ள எஸேய்ஸா விமான நிலைத்தில் இன்று அதிகாலை ஆர்ஜென்டின அணியினர் வந்திறங்கினர்.

அதன்பின் திறந்த பஸ் மூலம், விமான நிலையத்திலிருந்து ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No description available.

தற்போது ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்க கட்டடத்தொகுதியில் தங்கவைக்கப்பட்ட அணியினர் தலைநகரில் திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ஜென்டீனாவில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

No description available.

இந்நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் இன்று வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...