follow the truth

follow the truth

April, 8, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவிக்டர் ஐவன் - பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

விக்டர் ஐவன் – பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

Published on

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பலமான சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

நெலும் மாவத்தை பொஹொட்டுவ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் விக்டர் ஐவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இருவர் இணைந்து கொண்டனர். பசில் ராஜபக்ஷவுடன் பொஹொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அண்மைய ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையான போராட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் விசேட கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். போராட்டத்தைப் பாதித்த சமூகப் பிரச்சினைகளில் பலராலும் கவனிக்கப்படாத சாதி அழுத்தமும் இருப்பதாக விக்டர் ஐவன் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், போராட்டம் குறித்து சிறப்பு ஆய்வை மேற்கொண்டதாகவும், இலங்கையில் வலுவான சமூகப் பிரச்சினையாக உள்ள சாதி ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசியல் கட்சிகள் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொஹொட்டுவவை கடுமையாக விமர்சிக்கும் விக்டர் ஐவனுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்புசுமார் ஒன்றரை மணிநேரம் மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...

“இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை

டிரம்பின் வரி பிரச்சினையை சமாளிக்க இலங்கை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Corporation economic partnership –...