படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிச் சடங்குகள் இன்று (18) நடைபெற உள்ளது.
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டர் டிச. 15ம் திகதி கொலை செய்யப்பட்டார்.
தற்போது, அவர் பொரளை பொது மயானத்திற்கு வந்த வழியிலேயே புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, சம்பந்தப்பட்ட வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காணொளிகளை விசாரணைக்காக ஒன்று திரட்டியதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல பகுதிகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸும் அந்த நபர்களில் ஒருவர்.
பொரளை பொது மயானத்தில் கைகால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் காரில் சென்ற அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Many have been inquiring about the final journey of the mortal remains of our dearest brother Dinesh. Please find below the arrangements made. Please share with friends and family. pic.twitter.com/jOiUVtXUC1
— Ramesh Schaffter (@RameshSchaffter) December 17, 2022
இணைப்புச் செய்தி
தினேஷ் ஷாப்டர் கொலை : 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு
தினேஷ் ஷாப்டர் கொலைக்கான காரணமும், பின்னணியும்
கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு
தினேஷ் ஷாப்டர் கொலை : ஊடகவியலாளர் சமுதிதவுக்கு சிஐடி அழைப்பு