follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2தினேஷ் ஷாப்டர் கொலை : 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு

தினேஷ் ஷாப்டர் கொலை : 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு

Published on

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சுமார் 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஸ் ஷாப்டரின் காரில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின்  மரணம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸிடமும் சிஐடி வாக்குமூலம் பெற்றுள்ளது.

அந்த விசாரணைகள் தொடர்பில் பொரளை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...