follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகவுள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகவுள்ளது

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய உள்ளூராட்சி பிரதிநிதிகள் வாக்களிக்க தயாராக இருப்பதாகவும், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி பிரதிநிதிகள் கிராமத்தில் பணியாற்றியதால், தேர்தலில் மக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சம் இல்லை எனவும், தேர்தல் தயாராகும் போது மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றின் மீது கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டாம் என்றும் சாகர காரியவசம் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தங்களைத் தீர்த்து இடைநிறுத்தப்பட்ட அரச சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெளியே தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு...

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...

சிறி தலதா வழிபாட்டு தகவல்களை பார்வையிட விசேட வலைத்தளம்

சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக...