மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படும் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு மாற்று வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (6) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.