follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP3உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி தேர்தலை 2023 ஜனவரி 5 ஆம் திகதி அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பின்னர் கொழும்பு மாவட்டம் மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிய வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் SCFR/35/2016 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும், எனவே கட்டாயமாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...