follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுமின் கட்டண அதிகரிப்பு குறித்த நாடாளுமன்ற வாதங்கள்

மின் கட்டண அதிகரிப்பு குறித்த நாடாளுமன்ற வாதங்கள்

Published on

அடுத்த வருடம் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும். மின்சார சபையை எட்டு அலகுகளாக உடைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த கால நட்டங்களை சமாளிக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படாது எனவும், மின் கட்டண அதிகரிப்பினால் தொழில்கள் பாரியளவில் பாதிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சபைத் தலைவரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, மின்சார சபையில் எந்தெந்த இடங்களில் நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியவில்லை என குறிப்பிட்டார்.

இப்பிராந்தியத்தில் அதிக மின்சார அலகு செலவை இலங்கை கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். ஒரு அலகு மின்சாரத்தின் விலை உயரும் போது உற்பத்திச் செலவு அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றார்.

பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் எனவும், இது தொடர்பில் மின்சார அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...